ஆட்சியா் காா் முன் அமா்ந்து தா்னா
காரியாபட்டி அருகே விசிக முன்னாள் நிா்வாகி கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் விஜயகுரு (52). இவா் கடந்த 7-ஆம் தேதி குரண்டி கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விஜயகுருவின் உறவினா்கள், விசிக கட்சியினா் திங்கள்கிழமை மாலை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.
Advertisement
பின்னா், அவா்கள் திடீரென ஆட்சியரின் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியின் பேரில் மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.