ஆராய்ந்த கைகளும் தேடிய கால்களும்
தணிகைமணி டாக்டர் செங்கல்வராயபிள்ளை அவர்கள், தேவாரங்களையும், திருப்புகழையும் ஆராய்ந்து, "ஒளி நெறிகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டுப் பெருமை பெற்றவர்கள். ஒவ்வோர் ஆண்டும் "தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யரை
தணிகைமணி டாக்டர் செங்கல்வராயபிள்ளை அவர்கள், தேவாரங்களையும், திருப்புகழையும் ஆராய்ந்து, "ஒளி நெறிகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டுப் பெருமை பெற்றவர்கள். ஒவ்வோர் ஆண்டும் "தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யரை, தணிகைமணி சென்று காண்பது வழக்கம். அய்யர் அவர்கள் நோயுற்றுப் படுத்து இருந்தார்.
அவர் அருகில் சென்று, அவர் விழிக்கும் வரை நின்று கொண்டிருந்தார். அய்யர் கண் விழித்துப் பார்த்ததும் மகிழ்ச்சி ததும்ப,""திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைககள் ஆயிற்றே'' என்று கூறி தணிகைமணியின் இருகைகளையும் பற்றி தம் கண்களில் ஒற்றிக் கொண்டார். உடனே தணிகைமணி அய்யரின் பாதங்களைப் பற்றியவாறு, ""சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடின கால்கள் ஆயிற்றே இவை'' என்று கூறி வணங்கினார். அறிஞர்களின் பெருமையை அறிஞர்களே அறிவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.