முகப்பு
மகளிர்மணி

பூசணியின் மருத்துவ குணங்கள்!

மஞ்சள்பூசணி காய், விதைகள், இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் பெருக்கும். உடலைப் பலப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:

மஞ்சள்பூசணி காய், விதைகள், இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் பெருக்கும். உடலைப் பலப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும். நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல், காக்கா வலிப்பு, பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். பல லேகியங்கள், நெய் வகைகள் பூசணிகாயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

உடல் சூட்டைத் தணிக்க மஞ்சள் பூசணியின் சதைப்பகுதியை ஓடு நீக்கி எடுத்து, விதைகளை நீக்கி, வேகவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தேவையான அளவு பால், தேன், நெய் கலந்து லேகியமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த லேகியத்தை 2 தேக்கரண்டிகள் தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

வெள்ளைப்படுதல் சரியாக  கல்யாண பூசணிக்காய், உள்ளிருக்கும் சதைப்பற்றான பகுதியை எடுத்து அதனுடன் சமஅளவு செம்பருத்திப் பூ இதழ்கள் சேர்த்து, வேக வைத்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, 25 கிராம் அளவு, காலையில் 10 நாள்கள் சாப்பிட்டால்போதும் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.