தேவையான பொருள்கள்:
சேப்பங்கிழங்கு -1/2 கிலோ
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உ.பருப்பு, க.பருப்பு - தலா அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
புளிப்பில்லாத கெட்டி மோர் - 2
கிண்ணம்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து சிவந்ததும் அதில் வேகவைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போட்டு வதக்கவும்.
பச்சைமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலையைப் போட்டு தேவையான உப்புப் போட்டு ரொம்பவும் மசிக்காமல் கிளறி மோரை ஊற்ற வேண்டும். ரொம்பவும் கொதிக்க விட வேண்டாம். சிறிது அரிசி மாவு தூவி இறக்கவும். இது மிகவும் ருசியான ஒரு கூட்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.