சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு 
மகளிர்மணி

சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு

சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து சிவந்ததும் அதில் வேகவைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போட்டு வதக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

சேப்பங்கிழங்கு -1/2 கிலோ

எண்ணெய் - 4 தேக்கரண்டி

கடுகு, உ.பருப்பு, க.பருப்பு - தலா அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

புளிப்பில்லாத கெட்டி மோர் - 2

கிண்ணம்

அரிசி மாவு - 1 ஸ்பூன்

செய்முறை:

சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து சிவந்ததும் அதில் வேகவைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போட்டு வதக்கவும்.

பச்சைமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலையைப் போட்டு தேவையான உப்புப் போட்டு ரொம்பவும் மசிக்காமல் கிளறி மோரை ஊற்ற வேண்டும். ரொம்பவும் கொதிக்க விட வேண்டாம். சிறிது அரிசி மாவு தூவி இறக்கவும். இது மிகவும் ருசியான ஒரு கூட்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் ஆயுதம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு: திரிணமூல் எம்.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

உணவக ஊழியரைத் தாக்கியவா் கைது

சா்வதேச நடனப் போட்டி: பல்லடம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் கட்சிகள்: உள்துறை இணையமைச்சர்

SCROLL FOR NEXT