முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

ஆட்டுப் பாலை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். ரத்தத்தை ஊற வைக்கும். ரத்தச் சோகையைக் குணமாக்கும்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 10:43 PM

ஆட்டுப் பாலை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். ரத்தத்தை ஊற வைக்கும். ரத்தச் சோகையைக் குணமாக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவை தழும்புகள் மீது தடவி வந்தால், அவை மறையும். எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவிவந்தாலும் தழும்பு மறைந்துவிடும்.

வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலி குணமாக கசகசாவை மிக்ஸியில் அரைத்துப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலைக் குளிர்ச்சியாக்கும்.

Advertisement

ஊறவைத்து முளைக்க வைத்த தானிய வகைகளை வாரத்துக்கு மூன்று முறையாவது சாப்பிட்டால், நரம்பு சுண்டி இழுப்பது சரியாகும்.

சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு கொத்துமல்லி விதை உதவும்.

சர்க்கரை நோயாளியின் மருந்து பொக்கிஷம் பாகற்காய். வாலிபம் தொடங்கி, பாகற்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு நரை, திரை ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.