பயறு உப்புமா
ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
தேவையான பொருள்கள்:
முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக அரித்த பசலைக்கீரை-தலா 1 கிண்ணம்
ரவை- முக்கால் கிண்ணம்
Advertisement
Advertisement
தக்காளி- 4
பச்சை மிளகாய்- 2
கடுகு- 1 தேக்கரண்டி
மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு- அரை மூடி
உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதில் தக்காளி, விதை நீக்கி நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர்
பச்சைப்பயறு, பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எலுமிச்சைச் சாறை விடவும். கடைசியாக ரவை கலந்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் போதும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.