முகப்பு
மகளிர்மணி

பயறு உப்புமா

ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:10 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 10:54 PM

தேவையான பொருள்கள்:

முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக அரித்த பசலைக்கீரை-தலா 1 கிண்ணம்

ரவை- முக்கால் கிண்ணம்

Advertisement

தக்காளி- 4

பச்சை மிளகாய்- 2

கடுகு- 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு- அரை மூடி

உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு

Updated On : 11 ஏப்ரல், 2026 at 10:54 PM

செய்முறை:

ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதில் தக்காளி, விதை நீக்கி நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர்

பச்சைப்பயறு, பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எலுமிச்சைச் சாறை விடவும். கடைசியாக ரவை கலந்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.