முகப்பு
மகளிர்மணி

பலாப்பழ கீர்

பலாப்பழத்தில் கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:34 AM
பலாப்பழ கீர்
பகிர்:

தேவையான பொருள்கள்:

பலாப்பழச் சுளைகள் -500 கிராம்

வெல்லம்-200 கிராம்

Advertisement

ஏலக்காய்த் தூள்- 2 தேக்கரண்டி

தேங்காய்- 1

புழுங்கல் அரிசி -100 கிராம்

நெய் -50 கிராம்

பாதாம் பருப்பு , உலர் திராட்சை, ஏலக்காய் -தலா 10

தேங்காய்க் கீற்று -1 மேசைக்கரண்டி

உப்பு -1 சிட்டிகை

செய்முறை:

பலாப்பழத்தில் கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும். பாதாம் பருப்பை இளம் சூடான வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.

அரிசியை நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்தவுடன் கெட்டியாக அரைக்க வேண்டும். ஏலக்காய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இதை சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். தேங்காயை அரைத்து இரண்டு டம்ளர் கெட்டியான பாலும் ஒரு டம்ளர் தண்ணீர் பாலும் தயார் செய்ய வேண்டும்.

அடிகனமான பாத்திரத்தில் பலாச்சுளை, வெல்லம், ஏலக்காய், தண்ணீர், தேங்காய், பால் சேர்த்து அடுப்பில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் அரிசி உருண்டைகளைப் போட்டு கால் மணி நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பாதாம் பருப்பு தோலை நீக்கி விழுதாக அரைக்க வேண்டும். இதை கீரில் சேர்க்க வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் தேங்காய்க் கீற்று, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து சேர்க்க வேண்டும். இதில் கெட்டியான பாலை சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.