செம்பருத்தி தேநீர்!
தினம் இரண்டு செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் கலந்து அருந்தலாம்.
தினம் இரண்டு செம்பருத்திப் பூவின் (5 இதழ் கொண்டது) இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் கலந்து அருந்தலாம். இதனால் உடல்சூடு தணியும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, சர்க்கரை நோய், வெள்ளைப்படுதல் உள்ளிட்ட நோய்கள் குணமாகும். ரத்தத்தில் பித்தம் குறையும். தலைமுடி உதிர்தல் நிற்கும். சர்க்கரை நோயாளிகள் தேனைத் தவிர்க்கலாம்.
பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம்சூட்டில் மை போன்று அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால், தொண்டை வீக்கம் குறையும்.
கொள்ளுப் பருப்பை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால் ஜலதோஷம் குணமாகும்.
Advertisement