முகப்பு
சிறுவர்மணி

பாதுகாப்பான இடம்!

முருகனும் லாரன்ஸூம் நண்பர்கள். அதுமட்டுமல்ல..., ஒரே அறையில் தங்கி இருப்பவர்கள். முருகனுக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் லாரன்ஸிடம்தான் பணம் கேட்பான்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:29 AM
பகிர்:

முருகனும் லாரன்ஸூம் நண்பர்கள். அதுமட்டுமல்ல..., ஒரே அறையில் தங்கி இருப்பவர்கள். முருகனுக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் லாரன்ஸிடம்தான் பணம் கேட்பான்.

 அவனும் பணம் தர மறுப்பதில்லை. ஆனால் முருகன் கேட்கும் பணத்தை லாரன்ஸ் தன் பர்சில் இருந்தோ தன் பெட்டியிலிருந்தோ எடுத்துத் தருவதில்லை.

 அவர்கள் தங்கியிருந்த அறையின் சுவற்றில் மாதாவின் படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும். மாதாவின் படத்திற்குக் கீழே உள்ள ஸ்டாண்டில் ஒரு பைபிள் வைக்கப்பட்டிருக்கும். தினமும் காலை, மாலை என்று பைபிளிலிருந்து இரண்டொரு பக்கங்களைப் படிக்கத் தவறுவதில்லை லாரன்ஸ்.

 முருகன் கேட்கும் பணத்தை பைபிளிலிருந்து எடுத்துத் தருவான். பணத்தை இப்படியா பத்திரப்படுத்துவார்கள்! முருகனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! அதைப்பற்றி சந்தேகம் கேட்பதற்கு முருகன் நினைப்பான். ஆனால் நண்பனின் மனம் சங்கடப்படுமோ என்று சும்மா இருந்துவிடுவான்.

 ஆனால் ஒரு நாள் வேடிக்கையாக,

 ""நமக்கு மனச்சங்கடம் ஏற்படும்போதெல்லாம் பைபிளை எடுத்து படிப்பது போல பணம் வேண்டுமென்றால்கூட பைபிளை நாட வேண்டும் போல இருக்கு''என்றான்.

 அதற்கு லாரன்ஸ், ""என்னைப் பொறுத்தவரை ரூபாய் நோட்டுக்களை பத்திரமாக வைக்க பர்சோ அல்லது பெட்டியோ பாதுகாப்பான இடம் அல்ல. நான் பைபிளைத்தான் பாதுகாப்பான இடம் என்று கருதுகிறேன். ஏனெனில் பைபிளை திறந்து பார்க்கிற எண்ணம் உடையவர்கள் அதற்குள் இருக்கும் பணத்தைத் திருட மாட்டார்கள். திருடுகிற புத்தி உள்ளவர்கள் பைபிளைத் திறக்கமாட்டார்கள்''

 நண்பனின் பதிலைக் கேட்டு அப்படியே அசந்து போனான் முருகன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.