10 பேர் கொண்ட பராகுவேவிடம் தோல்வியுற்று, கண்ணீருடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி!
கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி அணி குறித்து...
பராகுவே அணியிடம் துருக்கி தோல்வியுற்று, கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து இரண்டாவது அணியாக வெளியேறியது. முதல் அணியாக ஹைதி வெளியேறியது.
இந்த உலகக் கோப்பையில் இருந்து பிரேசில் அணியிடம் ஹைதி அணி 0-3 என தோல்வியுற்று முதல் அணியாக வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பராகுவே - துருக்கி அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் 2ஆவது நிமிஷத்திலேயே பராகுவே அணியின் மத்தியாஸ் கலார்சா கோல் அடித்து அசத்தினார். 1-0 என முன்னிலை வகித்தது.
Advertisement
Advertisement
பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45+3ஆவது நிமிஷத்தில் பராகுவே அணியின் மிகுவெல் அல்மிரான் வாயிக்கு அருகே கை வைத்து பேசியதால், புதிய விதியின்படி ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், பராகுவே அணியில் ஒரு வீரர் குறைவாகவே விளையாடினார்கள்.
பின்னர், இரண்டாம் பாதியில் பலமுறை துருக்கி முயற்சித்தும் 10 பேர் கொண்ட பராகுவே அணியிடம் கோல் அடிக்க திணறியது. இறுதியில் 1-0 என பராகுவே அசத்தல் வெற்றி பெற்றது.
துருக்கி அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. தற்போது, இரண்டாவது போட்டியின் தோல்வியால் இரண்டாவது அணியாக உலகக் கோப்பையில் இருந்து துருக்கி அணி வெளியேறியது.
Turkiye knocked out of World Cup 2026 after 1-0 defeat to 10-man Paraguay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.