கலியாணம்...
வெயிலுக்கும் மழைக்கும் கலியாணமாம்
மேகம் மேளம் கொட்டுகிறதாம்
அயர்ந்த வண்டுகள் குழல் வாசிப்பாம்
Advertisement
Advertisement
அழகிய மரங்கள் பூச்சொறிந்ததாம்!
பூச்செடிகள் ஆட்டம் போட்டனவாம்
பொலபொல ஆலங்கட்டி விருந்தேதான்!
ஆச்சரிய மாய் சிறுவர் விருந்துண்டனர்
ஆகா எனத் தென்றல் வீசியதாம்!
ஊர்மக்கள் வியந்தே பார்த்தனராம்
ஒகோ எனவே கொண்டாட்டம்
சீராய் பறவைகள் வாழ்த்திசைக்க
சிறப்பாய் கலியாணம் நடக்கிறதாம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.