முகப்பு
தமிழ்மணி

இலக்கியப் பொன்மொழிகள்

ஆபத்துக் காலத்தில் பெற்றோர்க்கு உதவி செய்யாத பிள்ளை, கடும் பசியால் வாடும்போது, அப்பசியைப் போக்கிக் கொள்வதற்குக் கிடைக்காத உணவு, தாகமாக இருக்கும்போது அதைத் தணிக்க உதவாத தண்ணீர், வறுமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளாத பெண்கள், கோபத்தை அடக்கி ஆளாத அரசன், குருவின் உபதேசத்தைக் கேட்டு, அதன்படி நடக்காத சீடன், பாவத்தைத் தீர்க்காத புண்ணியத் தீர்த்தம் - இவை ஏழினாலும் மனிதனுக்கு எந்தவொரு பயனும் இல்லை.

Updated On : 25 மே 2014, 2:26 am IST
பகிர்:

ஆபத்துக்கு உதவாத ஏழு!

ஆபத்துக் காலத்தில் பெற்றோர்க்கு உதவி செய்யாத பிள்ளை, கடும் பசியால் வாடும்போது, அப்பசியைப் போக்கிக் கொள்வதற்குக் கிடைக்காத உணவு, தாகமாக இருக்கும்போது அதைத் தணிக்க உதவாத தண்ணீர், வறுமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளாத பெண்கள், கோபத்தை அடக்கி ஆளாத அரசன், குருவின் உபதேசத்தைக் கேட்டு, அதன்படி நடக்காத சீடன், பாவத்தைத் தீர்க்காத புண்ணியத் தீர்த்தம் - இவை ஏழினாலும் மனிதனுக்கு எந்தவொரு பயனும் இல்லை.

ஆபத்துக் குதவாப் பிள்ளை

Advertisement

Advertisement

அரும்பசிக் குதவா அன்னம்

தாகத்தைத் தீராத் தண்ணீர்

தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன்

குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம்

பயனில்லை ஏழும் தானே!

(விவேக சிந்தாமணி-2)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.