தமிழ்மணி

மேகம் போல கலையும் உடல்

உடலானது, மலைமுகடுகளிலே தவழ்ந்து செல்லும் வெண்மேகம் போலத் தோன்றி, அவ்விடத்திலே நிலைத்திராமல், அதனைக் கைவிட்டுப் போய்விடும் தன்மையது.

தினமணி செய்திச் சேவை

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம்பெற்ற

யாக்கையால் ஆய பயன்கொள்க;-யாக்கை

மலையாடும் மஞ்சுபோல் தோன்றி, மற்றாங்கோ

நிலையாது நீத்து விடும்.

(பாடல் 28 அதிகாரம்: யாக்கை நிலையாமை)

உடலானது, மலைமுகடுகளிலே தவழ்ந்து செல்லும் வெண்மேகம் போலத் தோன்றி, அவ்விடத்திலே நிலைத்திராமல், அதனைக் கைவிட்டுப் போய்விடும் தன்மையது.

அதுபோலவே, உயிரும் உடற்கூடெடுத்துத் தோன்றிப் பின் அதனைக் கைவிட்டுப் போய்விடும் இயல்பினை உடையது. அதனால் உடலினை உறுதி உடையதாகப் பெற்றவர்கள், தாம் பெற்ற அந்த உடலால் ஆன நல்ல பயன்களை எல்லாம் உடனேயே நிறைவேற்றிக் கொள்வார்களாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT