முகப்பு
வெள்ளிமணி

வாழ்வில் ஒளி ஏற்றுபவனுக்கு ஆயிரம் தீப வழிபாடு

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுடன் இணைந்து புகழ்பெற்று விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் திருக்கோயில்.

Updated On : 14 நவம்பர் 2013, 3:30 pm IST
பகிர்:

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுடன் இணைந்து புகழ்பெற்று விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் திருக்கோயில். காட்டழகிய சிங்கர் என்னும் திருநாமத்துடன்   இங்கே மிகப் பெரிய உருவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர்.

ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.   தொலைவு சென்றால் இந்தக் கோயிலை

அடையலாம்.

Advertisement

Advertisement

நூற்றாண்டுகளுக்கு முன்னர்... அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த இடம். இங்கே யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, அடிக்கடி மக்களுக்கு பெரும் நெருக்கடியைத்   தந்தனவாம். அப்போது, யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன்,   லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்ற இந்தக் கோவிலை கி.பி.1297ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்   புனரமைத்தான். இங்கே சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கலாம். சுமார் 8 அடி   உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்தும்.

சிறப்பு மிகுந்த இந்தக் கோயிலில் 12வது ஆண்டாக, நவ.17 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சஹஸ்ர தீப வழிபாடு நடைபெறுகிறது. மாருதி நண்பர்கள் குழுவினரின் ஏற்பாட்டில், ஞானநாயகன் என்ற   தலைப்பில் நாகை முகுந்தனின் உபந்யாசமும் நடைபெறுகிறது. இருள் கவிந்த இடமாகத் திகழ்ந்த இந்தக் கோயிலைச் சுற்றி ஒளிவெள்ளம் பரவும் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments