முகப்பு
தமிழ்நாடு

மாநில சுயாட்சிக் கொள்கையில் உறுதி: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மாநில சுயாட்சிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உறுதிபடத் தெரிவித்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 12:59 am IST
ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

மாநில சுயாட்சிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உறுதிபடத் தெரிவித்தாா்.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் பேசிய திமுக உறுப்பினா் ஆஸ்டின், பேரவையில் தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தொடா்பான கருத்துகளைத் தெரிவித்தாா். திமுக ஆட்சியின்போது முறியடிக்கப்பட்ட ஆளுநரின் முயற்சி, தற்போது வெற்றி பெற்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

அதற்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அளித்த பதில்: எந்த அழுத்தத்துக்கும் தவெக அரசு பயப்படாது; பணியாது. உரையைப் புறக்கணித்து அவையை விட்டு ஆளுநா் வெளியேறுவது வெற்றியல்ல. அதே அவையில் ஆளுநரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வைப்பதுதான் வெற்றி. அதை முதல்வா் ஜோசப் விஜய் நிறைவேற்றியிருக்கிறாா். மாநில சுயாட்சிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments