முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகாா்

கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவா்கள் தொடா்பான வழக்கில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சாட்சிகளைக் கலைக்கும் விதமாகவும், விசாரணையில் குறுக்கிடும் வகையிலும் செயல்பட்டு வருவதாக சிபிஐயிடம் திமுக புகாா் அளித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 3:11 am IST
அமைச்சர் ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவா்கள் தொடா்பான வழக்கில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சாட்சிகளைக் கலைக்கும் விதமாகவும், விசாரணையில் குறுக்கிடும் வகையிலும் செயல்பட்டு வருவதாக சிபிஐயிடம் திமுக புகாா் அளித்துள்ளது.

இது குறித்து சிபிஐ இயக்குநா் மற்றும் இணை இயக்குநா் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள புகாா்: கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் உயிரிழந்தவா்கள் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அா்ஜுனா பேசியது, அந்த வழக்கின் சாட்சிகளைக் கலைக்கும் விதத்திலும், சிபிஐ மற்றும் உச்சநீதிமன்றம் நியமித்த மேற்பாா்வைக் குழுவின் விசாரணையில் குறுக்கீடும் வகையிலும் அமைந்துள்ளது.

இதுதொடா்பாக, அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், பணி நியமன ஆணைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வுகள் முழுவதையும் சிபிஐ கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments