முகப்பு
வெள்ளிமணி

நிகழ்வுகள்

சென்னை குரோம்பேட்டை நேரு நகர் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள  ஸ்ரீ ரமணா ஆஸ்ரமத்தின் ரமணாலயத்தில்

Updated On : 24 ஜூன் 2022, 6:09 pm IST
பகிர்:

புனர்வசு பூஜை
சென்னை குரோம்பேட்டை நேரு நகர் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள  ஸ்ரீ ரமணா ஆஸ்ரமத்தின் ரமணாலயத்தில் புனர்வசு பூஜை  (ஸ்ரீ ரமணரின்  ஜென்ம நட்சத்திர நாள்) ஜூன் 30}இல் (வியாழக்கிழமை)  நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று மாலை 5.30 மணி முதல் இரவு வரை வேத பாராயணம் ,   ஸ்ரீ ரமணா அஷ்டோத்ர பூஜை,  தமிழ்ப் பாராயணம், அக்ஷரமணமாலை, ரமண சத்குரு, தியானப்பாட்டு, ஆரத்தி  பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை
பெறுகின்றன.
 தொடர்புக்கு }9444261296.

கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகேயுள்ள 26 சேத்தூர் கிராமத்தில் உள்ள ஐம்பெருந்திருக்கோயில்களின் கும்பாபிஷேக விழா ஜூன் 26 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் 24}ஆம் தேதி தொடங்குகின்றன.

ஆனி திருமஞ்சனம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 49 கி.மீ. தொலைவில் உள்ள,  திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆவுடையார்கோவில் எனப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா ஜூன் 24}ஆம் தேதி தொடங்கி, ஜூலை 5}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 04371}233301.

Advertisement

Advertisement

சிதம்பரம் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்மாள் ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன மஹோத்ஸவ விழா ஜூன் 27}ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: ஜூலை 6} விசேஷ மஹாபிஷேகம்.

திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பாலூரை அடுத்த புதூர் பி.சி.பி. நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருவிழா ஜூன் 30}இல் (வியாழக்கிழமை)  இரவு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments