தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
இந்த வார விசேஷம்..
• சென்னை, புழல், பாலாஜி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் 27 நட்சத்திரம் சித்தர் குடிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மே 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது.
• தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர், சாம்பவர்மூர்த்தி திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு மாபெரும் 1108}திருவிளக்கு பூஜை மே 1}ஆம் தேதி, மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
• விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் ஏரி, வன்னிய காட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதி மகா காளியம்மன், ஸ்ரீ துர்கை அம்மன், ஸ்ரீ ஈச்சடி வீரன் கோயிலில் சித்திரை பெüர்ணமியை முன்னிட்டு மே 1}ஆம் தேதி காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது.
Advertisement
• கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை, சென்னம்பாளையம் ஸ்ரீ எமதர்மர் கோயிலில் சித்ரா பெüர்ணமி சிறப்பு வழிபாடு மே 1}ஆம் தேதி காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது.
• தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மே 1}ஆம் தேதி காலை 6 மணியளவில் கிரிவலம் நடைபெறும்.
• திருச்சி மாவட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் மே 1 காலை மூலவர் முத்தங்கி சேவையும், இரவு 8 மணி அளவில் தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது.
• வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, வீரி செட்டிபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது.
• ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலிக்கு அருகில் மகேந்திரவாடி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி தேவி சமேத ஸ்ரீ சோமநாத ஈஸ்வரப் பெருமான் கோயிலில் திருக்கல்யாண வைபவம் மே 1}ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம திருவிளக்கு பூஜை நடைபெறும்.
• பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்கசுவாமிகளின் 153}ஆவது அவதார சித்திரை விழா மே 1-ஆம் தேதி கும்பகோணம் கூழ்சாலை முத்துபிள்ளை மண்டபத்தில் குத்துவிளக்கு பூஜை, பைரவ பூஜை , மகேஸ்வரபூஜை உள்ளிட்ட வைபவங்களுடன் நடைபெறுகிறது.
• ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சத்சங்கம் டிரஸ்ட் ஆதரவில் சித்திரை மாத அனுஷ மகோத்ஸவம் சிறப்பு பூஜைகள், ஹோமங்களுடன் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பார்ஸன் நகர் வளாகத்தில் மே 3-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.