அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
எந்த கோயிலில் என்ன விஷேசம் என்பதைப் பற்றி...
• பழநி மலைக்கோயில் ஸ்ரீமத் போகர் ஜீவ சமாதியில் ஜூன் 12 (வெள்ளிக்கிழமை) அவரது ஜெயந்தி விழா பிற்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.
• கோவை மாவட்டம், சிறுமுகை, பழத்தோட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு ஜூன் 13 (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
• சென்னை, வியாசர்பாடி அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் திருக்கோயில் ஆண்டுப்பெரு விழாவில் முக்கிய நிகழ்வாக ஜூன் 13 காலை 8.30 மணிக்கு -கொடியேற்றம், ஜூன் 17 மாலை 7.30 மணிக்கு - பஞ்சமூர்த்திகள் உற்சவம், ஜூன் 19 காலை 8.30 மணிக்கு - திருத்தேர் பெருவிழா, ஜூன் 22 காலை 9 மணிக்கு - தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு - திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
Advertisement
Advertisement
• தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அருகே உள்ள திருச்சத்திமுற்றம் சத்திவனேசுவரர் கோயிலில் ஜூன் 13}ஆம் தேதி முதல் 15}ஆம் தேதி வரை முத்துப்பல்லக்கு விழா மற்றும் முத்துப்பந்தல் அளிக்கும் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக வரும் ஜூன் 15}ஆம் தேதி (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணியளவில் திருச்சத்திமுற்றம் அருள்மிகு சத்திவனேசுவரர் திருக்கோயிலிலிருந்து அருள்மிகு தேனுபுரீசுவரர் வழங்கி அருளிய அழகிய முத்துப்பந்தல் நிழலில் மகிழ்ச்சியுடன் திருஞானசம்பந்தர் தேனுபுரீசுவரரை வந்து வழிபடலும், இரவு 8 மணியளவில் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறையும் அருள்மிகு தேனுபுரீசுவரர் முத்துவிமானத்தில் காட்சியளித்தல், எதிர்வணங்கி திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் நிழலில் திருவீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
• ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, மகா சக்திபுரம் எல்லையில் அமைந்துள்ள அருள்தரும் வேதநாயகி உடனாய சுயம்பு ஆதி ஈஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவாசகம் முற்றோதல் பெருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.
• தஞ்சாவூர், மேலவீதி, மூலை அனுமார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு நவதானியங்களாலான சிறப்பு அலங்காரமும் நடைபெற உள்ளது.
• கோவை, வெள்ளலூர், அரசண்ணன் கோயில் மண்டபத்தில் ஒரு நாள் தொடர் கீதா பஜன் நிகழ்ச்சி ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற இருக்கிறது.
• ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோச மங்கை அருள்மிகு மங்கள நாதசுவாமி திருக்கோயிலில் ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி அளவில் திருவாசக முற்றோதல் நடைபெறும்.
• கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஒன்றியம், ஆத்திக்குட்டை ஊரில் எழுந்தருளியுள்ள அத்தித்துறை மாரியம்மன் பெயரில் வள்ளி முருகனைப் போற்றிடும் வள்ளித் திருமணம் பற்றிய கதை சொல்லி வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா ஜூன் 14 மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
• சென்னை திருவான்மியூர் ஜெயஸ்ரீ கல்யாண மண்டபத்தில் வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் ஏற்பாட்டில் ஆனி மகம் மணிவாசகர் குருபூஜை விழா ஜூன் 19 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.