முகப்பு
வெள்ளிமணி

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தஞ்சாவூர் தெற்குவீதி, கலியுக வெங்கடேசப் பெருமாள் கோயிலில்..

Updated On : 5 ஜூன் 2026, 4:05 pm IST
பகிர்:

• தஞ்சாவூர் தெற்குவீதி, கலியுக வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஜூன் 5 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவோணம் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

• அலைகடல் பக்த ஜன சபா சார்பில் ஐந்தாம் ஆண்டு ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம் ஜூன் 6, 7}ஆம் தேதிகளில் பம்மல் அண்ணாசாலை ஸ்ரீஸத்ஸங்கம் வளாகத்தில் சேரன்மகாதேவி பால வெங்கடகிருஷ்ண பாகவதர் குழுவினரால் நடத்தப்படுகிறது.

• திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி கிராமத்தில் அருள்மிகு நீலாம்பிகை சமேத ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி கோயிலின் மகாகும்பாபிஷேகம் ஜூன் 7}ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

• சென்னை மேடவாக்கம், வடக்குப்பட்டு பிரதான சாலையில் உள்ள அருள்மிகு பாலகுருநாதஸ்வாமி திருக்கோயிலில் ஜூன் 7 (ஞாயிறு) மண்டலாபிஷேக பூர்த்தி விழா வேதபாராயணம், மகாபிஷேகம், சங்காபிஷேகம் போன்ற வைபவங்களுடன் நடைபெற இருக்கின்றன.

• கோவை, மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை வழி, இடுகம்பாளையம் அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுர நிலவு கால் பூஜை ஜூலை 7 (ஞாயிறு) காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது.

• ஸத்குரு சாந்தானந்த சுவாமிகள் டிரஸ்ட் ஆதரவில் திருவண்ணாமலை அடி அண்ணாமலை கிரிவலப்பாதை ஓம் நகரில் உள்ள சாந்தம் பெரியவா ஆஸ்ரமத்தில் ஸ்ரீ மஹாபெரியவா வேதபாடசாலை தொடக்க விழா ஜூன் 7}ஆம் தேதி காலை 8 மணி அளவில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் போன்ற வைபவங்களுடன் நடைபெற உள்ளது.

• ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர், அருள்மிகு மீனாட்சியம்மை உடனாகிய சொக்கநாதப் பெருமான் திருக்கோயிலில் திருமுறை சிவநெறி திருக்கூட்டத்தாரின் 50 }ஆம் மாத திருவாசக முற்றோதுதல் விழா ஜூலை 7 (ஞாயிறு) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.

• வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே டி.டி.மோட்டூர் மதுரா பெரியபள்ளம் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீமகாகாளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா ஸ்ரீலஸ்ரீ சிவா சுவாமிகள் தலைமையில் ஜூன் 8 (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

• ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், விளத்தூர் (விளக்கூர்) முத்துராமலிங்கபுரம், அருள்மிகு திருக்கோணேசுவரர் கோயில் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா ஜூன் 10 (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், டேம்ரோடு } கொடுமடுவில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் முப்பதாம் ஆண்டு விழா, திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.