ஏப்ரல் 1: ரசிகர்களை முட்டாளாக்கிய யூ டியூப்
பிரபலமான விடியோ இணையதளமான யூ டியூப் ஏப்ரல் 1-ஆம் தேதி தனது ரசிகர்கள் பலரை முட்டாளாக்கியது.
பிரபலமான விடியோ இணையதளமான யூ டியூப் ஏப்ரல் 1-ஆம் தேதி தனது ரசிகர்கள் பலரை முட்டாளாக்கியது.
யூ டியூப் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) அந்நிறுவனத்தினரால் ஒரு விடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், உலகின் சிறந்த விடியோ எது என்பதைக் கண்டறிவதற்காக 2005-ஆம் ஆண்டில் யூ டியூப் தொடங்கப்பட்டது. இணையதள ரசிகர்களின் ஆதரவுடன் கோடிக் கணக்கான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் பரிசீலித்து சிறந்த விடியோ எது என்பதை 2023-ஆம் ஆண்டில் அறிவிக்க இருக்கிறோம். எனவே ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் யூ டியூப் செயல்படாது. அதில் எந்த விடியோவையும் பதிவேற்றம் செய்ய முடியாது. பதிவேற்றம் செய்யப்பட்ட விடியோக்களும் அழிக்கப்பட இருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. இது யூ டியூப்பின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால் ஏப்ரல் 1-ம் தேதி யூ டியூப் வழக்கம் போல செயல்பாட்டில் இருந்தது. இதன் பின்னர்தான் ரசிகர்களை யூ டியூப் இணையதளம் முட்டாளாக்கியுள்ளது தெரியவந்தது. இதேபோல டுவிட்டர் இணையதளமும் ரசிகர்களை ஏமாற்றி ரசித்தது. உயிரெழுத்துகளை பயன்படுத்தாமல் "டுவிட்' செய்வோருக்கு மாதம்தோறும் பணப் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை முட்டாளாக்கியது.
Advertisement
Advertisement