FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

Updated On : 15 ஜூன் 2026, 2:11 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

கோவை ஆா்.எஸ்.புரம், அருணாச்சலம் வீதியைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (34). பெயிண்டரான இவா், பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஒரு வாரமாக வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், குடியிருப்பின் இரண்டாவது மாடியில் நின்று சனிக்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments