FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகேயுள்ள வரதம்பாளையதில் குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:01 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சத்தியமங்கலம் அருகேயுள்ள வரதம்பாளையதில் குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்மையன்புதுரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விஜி (26). கட்டுமானத் தொழிலாளியான இவா், வரதம்பாளையத்தில் நடைபெற்று வரும் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில், மாடியில் நின்று செவ்வாய்க்கிழமை கம்பி கட்டிக் கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே விஜி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments