மத்திய ஆப்பிரிக்க குடியரசில் புதிய அரசு பொறுப்பேற்பு
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி அதிபர் பிராங்கோயிஸ் செயல்படவில்லை எனக்கூறி மைக்கேல் ஜோடோடியா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அண்மையில் தலைநகர் பங்குய்யை கைப்பற்றினர்.
அப்போது அதிபர் பிராங்கோயிஸ் போயிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். பிரதமர் நிக்கோலஸ் டியாங்கே தலைமையில் கிளர்ச்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் அடங்கிய புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
Advertisement
Advertisement