பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பின்ஸின் படான் தீவுப்பகுதியில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது.
பிலிப்பின்ஸின் படான் தீவுப்பகுதியில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கம் நிலத்துக்கு அடியில் 4.2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தினால், பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரியொருவர் தெரிவித்தார்.