முகப்பு
உலகம்

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் முகாபே வெற்றி?

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே வெற்றிபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 2:55 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே வெற்றிபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

முகாபேவை எதிர்த்து களமிறங்கிய மோர்கன் டிஸ்வான்கிராய்க்கும் அவரது ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துக்கும் பலத்த தோல்வி என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இரண்டிலுமே எங்கள் கட்சிக்குத்தான் வெற்றி என்று முகாபேவின் ஜானு-பிஎப் கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதாகவும் அந்தந்த தொகுதி முடிவுகளை திரட்டிவருவதாகவும் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த தேர்தல் மோசடியானது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் முடிவை நிராகரிக்கவேண்டும் என முகாபேவை எதிர்த்து போட்டியிட்ட மோர்கன் டிஸ்வான்கிராய் தெரிவித்தார்,

அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.

33ஆண்டு காலமாக ஆட்சி புரியும் ராபர்ட் முகாபேவை (89) தோற்கடிக்க 3ஆம் முறையாக போட்டியிட்டார் டிஸ்வான்கிராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.