சமரசத் திட்டம்: அமெரிக்காவிடம் ரஷியா ஒப்படைப்பு
சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சமரசத் திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சமரசத் திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிரியா விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ரஷியா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.
இந்நிலையில், சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தை ரஷிய அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் விவாதிக்க உள்ளனர்.
Advertisement