லிபியாவில் குண்டு வெடிப்பு: அரசு அலுவலகம் சேதம்
லிபியாவின் கிழக்குப்பகுதியான பென்காஸி நகரில், புதன்கிழமை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், வெளியுறவுத்துறை அலுவலகம் கடும் சேதம் அடைந்தது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
லிபியாவின் கிழக்குப்பகுதியான பென்காஸி நகரில், புதன்கிழமை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், வெளியுறவுத்துறை அலுவலகம் கடும் சேதம் அடைந்தது.
குண்டு வைத்தது யார் என்று உடனடியாக தெரியவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,"கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றனர்.
பென்காஸியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஓராண்டுக்கு முன் இதே நாளில், பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க தூதர் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement