முகப்பு
உலகம்

ஈரான் ராணுவ சரக்கு விமான விபத்து: 15 பேர் பலி

ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 15 ஜனவரி 2019, 1:01 am IST
ஈரானில் உள்ள ஃபாத் விமான நிலையத்தில் விமான விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபடும் வீரர்கள்.
பகிர்:


ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கிர்கிஸ்தானின் பிஸ்கெக் என்ற இடத்திலிருந்து இறைச்சியை ஏற்றிக் கொண்டு வந்த ராணுவ விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு விமானப் பொறியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். 
விபத்துக்குள்ளான விமானம் போயிங் கார்கோ 707 வகையைச் சேர்ந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் திங்கள்கிழமை காலை தரையிறங்க முற்பட்டது. 
அப்போது, மோசமான வானிலையால், விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி முள்வேலி மீது மோதி தீப்பிடித்து அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்த பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments