ஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 காவலர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 காவலர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் சனிக்கிழமை காவல்துறை வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் 3 பேரும், பொதுமக்களில் இருவரும் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.