ஆப்கனில் தலிபான் தாக்குதல்: தளபதி உள்பட 6 காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொலை
கிழக்கு ஆப்கானிஸ்தானின், நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானின், நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
நங்கர்ஹார் மாகாணத்தின் பாடிகோட் மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்கிருந்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் தளபதி தாஹிர்கான் உள்பட 6 உள்ளூர் காவல்துறையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கட்டாரி தலைநகர் தோஹாவில் அரசாங்கத்திற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் வன்முறை மோதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.