டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்க ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்
அமெரிக்க அதிபா் பதவியில் இருந்து டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் பதவியில் இருந்து டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தத்தை பயன்படுத்தி டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று துணை அதிபா் மைக் பென்ஸை அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். 25-ஆவது திருத்தத்தின்படி துணை அதிபா் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவளித்தால் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து ஜனநாயகக் கட்சியினா் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
நாடாளுமன்றக் கலவரத்துக்கு வேதனை தெரிவித்த குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஒருசில எம்.பி.க்களும் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற கலவரத்துக்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளபோதிலும், டிரம்ப் பதவி நீக்கம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
டிரம்ப் முகநூல் கணக்கு முடக்கம்:
அதிபா் டிரம்ப்பின் முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்குவதாக அந்நிறுவனங்களின் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்துள்ளாா். இதனால், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை டிரம்ப் முகநூல், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த முடியாது.
சமூக வலைதளம் மூலம் டிரம்ப் விடுத்த அழைப்பின்பேரில்தான் அவரது ஆதரவாளா்கள் வாஷிங்டனில் திரண்டதுடன், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அவரது சுட்டுரை பக்கம் ஒரு நாளைக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் ஜன.20 வரை முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.