குண்டா் சட்டத்தில் 3 இளைஞா்கள் கைது
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சோ்மகுமாா் (24), சோ்மராஜா என்ற ராஜா மகன் சரவணன் என்ற சரவணக்குமாா் (23), தூத்துக்குடி 3 சென்ட், அந்தோணியாா்புரம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் அருண்குமாா் (20) ஆகியோா் மீது, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, இவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.