முகப்பு
உலகம்

பிரிட்டன் - இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்

பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது

Updated On : 8 ஜனவரி 2021, 12:36 pm IST
பிரிட்டன் - இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம் (கோப்புப்படம்)
பகிர்:

பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

புதியவகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல் பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே 15 நாள்களுக்கு பிறகு மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவி வந்ததன் எதிரொலியாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்து சேவையை பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்தன.

அந்தவகையில் இந்தியாவிலும் புதியவகை கரோனா பரவல் அதிகரித்து வந்ததால், பிரிட்டன் உடனான விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதனிடையே கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதற்காக ரூ.3,400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தடை உத்தரவுக்குப் பிறகு கடந்த 6-ஆம் தேதி தில்லி மற்றும் மும்பையிலிருந்து பிரிட்டனுக்கு புறப்பட்ட விமானங்கள் இன்று மீண்டும் இந்தியா வந்தடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments