ஜம்மு-காஷ்மீரில் பதுங்கு குழிகள் அழிப்பு: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!
பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை ராணுவம் அழித்தது பற்றி..
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றை ராணுவம் கண்டறிந்துள்ளது. அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கேரன் செக்டார் பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் படையினர் பதுங்கு குழி ஒன்றைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர். அங்கிருந்து 5 ஏகே ரகத் துப்பாக்கிகள்,9 ஏகே மேகசின்கள், ஒரு கைக்குண்டு, வெடிமருந்துகள் மற்றும் போர் தொடர்பான பிற பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
The Army has busted a terrorist hideout and recovered arms and ammunition in Kupwara district of Jammu and Kashmir, officials said on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.