உருமாறிய கரோனாவால் திணறும் பிரிட்டன்: பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியது
பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்ட முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 59,937 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,17,409-ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.
தொற்று பாதிப்புக்கு மேலும் 1,035 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80,868 ஆக உயர்ந்துள்ளது
Advertisement
கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,406,967-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 15,29,574 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.