அமெரிக்கா: தினசரி பலி புதிய உச்சம்
அமெரிக்காவில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,470 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,470 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.
புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,89,621-ஆகவும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,33,69,732-ஆகவும் உள்ளது.
தினசரி பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.