கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் புரட்சி வெடித்திருக்கும் இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.