உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் ரஷியா தாக்குதல்: 6 பேர் பலி
உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் திங்கள்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கீவ்: உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் திங்கள்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், இன்று காலை முதல் டோரிட்ஸ் நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்கலாம்: இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி! ஒரு டாலர் ரூ.79.98
Advertisement
Advertisement
இந்த தாக்குதலில் நகரில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தில் இருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில், ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த கட்டடத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.