பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
தென்மேற்கு பிலிப்பைன்ஸின் ஒரு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிலா (பிலிப்பைன்ஸ்): தென்மேற்கு பிலிப்பைன்ஸின் ஒரு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென்மேற்கு பிலிப்பைன்ஸின் ஒரு பகுதியில் வியாழன் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹுகே அருகே பூமிக்கடியில் சுமார் 120 கிலோமீட்டர் (75 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Advertisement
Advertisement
நிலநடுக்கம் ஏற்பட்ட ஹுகே மணிலாவிலிருந்து 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.