காஸாவில் மருத்துவமனை மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!
காஸாவின் பிரதான மருத்துவமனையைச் சுற்றி வெளியே கடும் சண்டை நடந்துகொண்டிருக்கிறது.
கான் யூனிஸ்: காஸாவின் பிரதான மருத்துவமனையைச் சுற்றி வெளியே கடும் சண்டை நடந்துகொண்டிருக்கிறது.
குழந்தைகளையும் மற்றவர்களையும் வெளியேற்ற உதவியதாக உதவியதாக தெரிவித்த இஸ்ரேல் கூறியதை மறுத்த மருத்துவமனை அலுவலர்களும் மக்களும் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருள்களும் இல்லை. பிஞ்சுக்குழந்தைகளைக் காப்பதற்கான இன்குபேட்டர் சாதனங்கள் பயன்படுத்த முடியாமல் கிடக்கின்றன.
Advertisement
Advertisement
உடனடியாகத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற அழைப்புகளை நிராகரித்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற 240 பேரும் விடுவிக்கப்படாதவரை தாக்குதல் தொடரும் என்றிருக்கிறார்.
ஷிபா மருத்துவமனையைச் சுற்றி குண்டுகள் வீசப்படுவதாகவும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எந்தவித ஆதாரங்களும் இல்லாமலேயே மருத்துவமனைக்குள் ஒரு கட்டளை முகாமை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும் மருத்துவமனை ஊழியர்களும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அவர்கள் வெளியே இருக்கிறார்கள். வாசலிலிருந்து மிக அருகிலேயே இருக்கிறார்கள் என்கிறார் அருகே வசிக்கும் ஒருவர்.
மருத்துவமனையிலிருக்கும் கடைசி மின்சார ஜெனரேட்டரும் எரிபொருள் இல்லாமல் சனிக்கிழமை நின்றுவிட்டது. இதனால், மூன்று குறைப்பிரசவக் குழந்தைகளும் 4 நோயாளிகளும் இறந்துவிட்டனர் என்று நலவாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 36 குழந்தைகள் இறந்துவிடக் கூடிய ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.