முகப்பு
உலகம்

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

சஹீராவின் வரி மோசடி வழக்கு முடிவுக்கு!

Updated On : 8 மே, 2024 at 4:41 PM
பாடகி சஹீரா - AFP
பகிர்:

கொலாம்பியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாடகி சஹீரா மீது சுமத்தப்பட்டுள்ள 6.6 மில்லியன் யூரோக்கான (இந்திய மதிப்பில் 59 கோடி ரூபாய்) வரி மோசடி வழக்கை முடித்து வைப்பதாக புதன்கிழமை ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதுமான ஆதாரங்கள் இல்லாததால், 2018 நிதியாண்டுக்கான சஹீராவின் வரி ஏய்ப்பு விசாரணையை முடிப்பதாக பார்சிலோனிய பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுல்ளது.

2018-ம் ஆண்டு பாடகி சஹீரா சில நிறுவனங்களுடன் இணைந்து வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

Advertisement

ஒரு மாதத்திற்கு பிறகு சஹீரா 6.6 மில்லியன் யூரோ பணத்தைச் செலுத்தியதாக அவரின் முகவர் தெரிவித்துள்ளார்.

2012 மற்றும் 2014-ல் அவர் ஈட்டிய வருவாய் தொடர்புடைய மற்றொரு வரி மோசடி வழக்குக்குக் கடைசி நேரத்தில், வரி கட்டி தீர்வு தேடினார் சஹீரா.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 14.5 மில்லியன் யூரோ அளவுக்கு அவர் மோசடி செய்ததாக ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்பெயினுக்கு 2015-க்குப் பிறகே இடம்பெயர்ந்ததாக வாதிட்டார்.

பின்னர் அந்த தொகையில் பாதியைச் செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டு அதனோடு கட்டப்பட்ட வரியும் சேர்த்து 7.8 மில்லியன் யூரோ செலுத்தினார்.

47 வயதான சஹீரா தற்போது மியாமியில் வசித்து வருகிறார். பார்சிலோனிய கால்பந்தாட்ட வீரர் ஜெரார்ட் பிக் உடன் ஏற்பட்ட மனக்கசிப்பின் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து, ஏப்ரல் 2023-ல் தனது இருமகன்களுடன் இடம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.