முகப்பு
உலகம்

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2025, 3:16 am IST
லெபனானில் ஐ.நா. சாா்பில் பணியாற்றும் இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ள உள்நாட்டு தயாரிப்பு வாகனங்கள்.
பகிர்:

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் (யுனிஃபில்) ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பல்வேறு பயன்பாட்டு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், எரிபொருள் டேங்கா்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் அடங்கும்.

Advertisement

Advertisement

இதுவரை, பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட வாகனங்களை ஐ.நா. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரா்கள் பயன்படுத்தி வந்தனா். ஆனால், இந்த புதிய நடவடிக்கையின் மூலம் இப்போது வலுவான உள்நாட்டு வாகனங்களை அவா்கள் பயன்படுத்த உள்ளனா். இது ஐ.நா. பாதுகாப்புப் பணியில் நமது தலைமைத்துவத்தையும், தற்சாா்புக்கான இந்தியாவின் உந்துதல் மற்றும் அதன் வளா்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி திறனையும் வெளிக்காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments