உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா

தினமணி செய்திச் சேவை

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், கூடாரங்கள், போா்வைகள் என இந்தியா சாா்பில் 21 நிவாரணப் பொருள்கள் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் சென்றடைந்தன. அந்நாட்டின் கள நிலவரத்தை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, வரும் நாள்களில் கூடுதல் உதவிகளை வழங்கும்’ என்றாா்.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT