நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!
அதிக சுமை காரணமாக நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
நைஜர் மாநில அவசர மேலாண்மை நிறுவனத்தின்படி, அவசரக்கால மீட்பு பணியாளர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த படகு விபத்து நிகழ்ந்தது. போர்கு உள்ளூர் அரசுப் பகுதியில் உள்ள கௌசாவா சமூகத்திற்கு அருகே அதிக சுமை ஏற்றப்பட்ட கப்பல் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மோதி கவிழ்ந்தது.
படகில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்றதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததாக ஷாகுமி மாவட்டத் தலைவர் சாது இனுவா முஹம்மது கூறினார்.
படகு விபத்துக்கள், பெரும்பாலும் அதிக சுமை, மோசமான வானிலை ஆகிய காரணங்களால் ஏற்படுவது நைஜீரியாவில் பொதுவானதாகும்.
At least 60 people have died and dozens more have been rescued after a boat carrying more than 100 passengers capsized in Nigeria’s north-central Niger State, according to local officials.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.