காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?
காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் படையினர் பயன்படுத்தியதாகக் கூறி, கட்டடத்தைத் தரைமட்டமாக்கிய நேரத்தில், அப்பகுதியில் இருந்தோர் அங்குமிங்கும் சிதறியோடிய காட்சிகளும் வெளியாகின.
அதுமட்டுமின்றி, காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இஸ்ரேலின் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வரும்நிலையில், இஸ்ரேலின் தற்போதைய அறிவிப்பானது காஸா நகரை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்தின் ஒருபகுதியாகக் கொள்ளப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் 64,368 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலும் பொதுமக்களே என்பதுதான் பெருந்துயர்.
இதனிடையே, ஹமாஸுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூறியுள்ளார்.
Israel calls on famine-stricken Palestinians to leave as it targets high-rises
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.