ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவு
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2-ஆம் கட்ட அமைதிப்பேச்சு ரத்து!
வாஷிங்டன் : ஈரானுடன் அமைதிப்பேச்சில் ஈடுபட அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் குழுவினரை மீண்டும் தாயகம் திரும்புமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பணித்தார்.
பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் அமெரிக்கா உடனான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) அன்று அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அராக்சி, ஈரானிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி மற்றும் தூதர் ரெசா அமிரி மொக்தம் ஆகியோர் இன்று(ஏப். 25) காலை பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
summary