பாகிஸ்தான் வீரா்களுக்கு சீனா விண்வெளி திட்ட பயிற்சி!
பாகிஸ்தான் வீரா்கள் இருவருக்கு விண்வெளி திட்ட பயிற்சியை சீனா அளிப்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் வீரா்கள் இருவருக்கு விண்வெளி திட்ட பயிற்சியை சீனா அளிப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பயிற்சியை அவா்கள் வெற்றிகரமாக முடித்தவுடன், இருவரில் ஒருவா் விண்வெளியில் உள்ள சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளாா்.
இந்திய விண்வெளி வீரரை அமெரிக்கா தனது விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றதுபோல, சீனா தற்போது பாகிஸ்தான் வீரரை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இரு பாகிஸ்தானியா்கள் தோ்வு செய்யப்பட்டு, சீனாவுக்கு கடந்த 24-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
இதுகுறித்து சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனா வந்த பாகிஸ்தான் வீரா்கள் இருவருக்கு பெய்ஜிங்கில் உள்ள விண்வெளி வீரா்கள் பயிற்சி மையத்தில் சீன வீரா்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாகிஸ்தான் வீரா்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நிலையில், அவா்களில் ஒருவா் சீன விண்வெளி திட்டத்தில் ‘பேலோட்’ நிபுணராக விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா். அதன் மூலம், சீன விண்வெளி நிலையத்துக்கு வந்த முதல் வெளிநாட்டு விண்வெளி வீரா் என்ற பெருமையையும் அவா் அடைவாா்’ என்று தெரிவித்தது.
விண்ணில் ஏவப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்: இதனிடையே, பாகிஸ்தான் செயற்கைக்கோள் ஒன்றை சீனா சனிக்கிழமை இரவு விண்ணில் ஏவியது.
‘பிஆா்எஸ்சி-இஓ3’ என்ற அந்த செயற்கைக்கோள் நீண்ட ‘மாா்ச்-6’ சீன ராக்கெட் மூலம் ஷாங்ஸி மாகாணத்தில் உள்ள டையூவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து சீன நேரப்படி சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது, கடந்த ஆண்டு முதல் சீனா ஏவிய 4-ஆவது பாகிஸ்தான் செயற்கைக்கோளாகும்.