பிரான்ஸ் அதிபரின் சிரியா பயணத்தின்போது குண்டுவெடிப்பு!
பிரான்ஸ் அதிபர் சிரியா சென்றுள்ள நிலையில் அங்கு குண்டுவெடிப்பு நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் அதிபர் சிரியா சென்றுள்ள நிலையில் அங்கு குண்டுவெடிப்பு நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரியா நாட்டிற்குப் பயணம் சென்றுள்ளார்.
இம்மானுவேல் மேக்ரான், சிரிய அதிபர் அஹமத் அல்-ஷாராவை டமாஸ்கஸ் நகரிலுள்ள அவரது அதிபர் மாளிகையில் வைத்து இன்று சந்தித்தார். அப்போது, அந்த மாளிகைக்கு அருகில் மேக்ரான் தங்கிய ஹோட்டலின் முன்பு குண்டுவெடிப்பு நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
மேக்ரான் பாதுகாப்பாக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் இருமுறை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் 18 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கு புகைமூட்டம் சூழ்ந்துள்ள காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குண்டுவெடிப்புக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும், அதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Bomb blast during French President's visit to Syria!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.