முகப்பு
உலகம்

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

தென் கொரியாவில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 4:27 am IST
வெடி விபத்து - பிரதிப் படம்
பகிர்:

தென் கொரியாவில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமாக இயங்கி வந்த ஆயுதத் தொழிற்சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில் இருவா் காயமடைந்தனா். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்துக்குள்ளான ஆலை, ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றாகும். இங்கு பெரிய அளவிலான ராக்கெட் உந்துசக்திகள் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் அதிநவீன ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

Advertisement

Advertisement